ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; 2வது சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் தோல்வி

இந்திய வீரர் சதீஷ் குமார் , தாய்லந்து வீரர் கன்டாபோன் வாங்சரோன் உடன் மோதினார்.

Update: 2024-08-22 21:49 GMT

கோப்புப்படம் 

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சதீஷ் குமார் , தாய்லந்து வீரர் கன்டாபோன் வாங்சரோன் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சதிஷ் குமார் 21-18, 18-21, 8-21 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்டாபோன் வாங்சரோனிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்

Tags:    

மேலும் செய்திகள்