சென்னை - டெல்லி மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..!

சென்னை, சேப்பாக்கத்தில் வரும் 10-ம் தேதி சென்னை - டெல்லி மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

Update: 2023-05-08 02:34 GMT

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 10-ந்தேதி மாலை 7.30 மணிக்கு நடக்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் பெற ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். டிக்கெட் விலை ரூ.1,500 - ரூ5,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. பெண்கள் டிக்கெட்டுகள் வாங்க தனி கவுண்ட்டர் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் டிக்கெட்டுகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 - 11.00 மணிக்குள் வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்