நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி : சூர்யகுமாருக்குப் பதிலாக களமிறங்கும் அஸ்வின் ?

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன

Update: 2023-11-14 12:55 GMT

Image : PTI 

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

நியூசிலாந்து அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகம் இருப்பதாலும், வான்கடே மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக  அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

நாளைய போட்டியில் இந்தியா 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 8ஆம் தேதி  நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்