இந்திய கிரிக்கெட் அணியை கலாய்த்த மைக்கேல் வாகன் ... பதிலடி கொடுத்த வாசிம் ஜாபர்

மைக்கேல் வாகன் இலங்கை தொடரில் இந்தியா சந்தித்த தோல்வி பற்றி கேள்வி எழுப்பி கிண்டலடித்தார்.

Update: 2024-08-12 02:11 GMT

புதுடெல்லி,

சமீபத்தில் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. அதனால் 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்று வீருநடை போட்டி வந்த இந்தியாவின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தம்முடைய எக்ஸ் பக்கத்தில் இந்திய ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார். அப்போது அவரிடம் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இலங்கை தொடரில் இந்தியா சந்தித்த தோல்வி பற்றி கேள்வி எழுப்பி கலாய்த்தார்.

இது குறித்து மைக்கேல் வாகன் பதிவிட்டது பின்வருமாறு. "ஹாய் வாசிம். இலங்கைக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் உங்களுடைய முடிவு என்ன? நான் கொஞ்சம் வெளியே இருந்ததால் அதை பார்க்காமல் தவற விட்டு விட்டேன். அது நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டார்.

அதற்கு வாஷிம் ஜாபர் பதிலளித்தது பின்வருமாறு:- "இதை உங்களுக்கு ஆஷஸ் தொடரை வைத்து புரியும் படி சொல்கிறேன் மைக்கேல். அந்த தொடரில் கடந்த 12 வருடங்களாக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெற்ற வெற்றிகளை இந்தியாவும் பெற்றது" என்று கூறியுள்ளார்.

அதாவது கடந்த 12 வருடங்களாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்லவில்லை. அதே போல இலங்கை ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்று மைக்கேல் வாகனுக்கு வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்