முதல் டெஸ்ட்: அறிமுக வீரராக களமிறங்கும் ஜெய்ஸ்வால்..! உறுதிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ..!

ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Update: 2023-07-11 17:42 GMT

Image Courtesy : ICC 

 இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியில் புஜாராவின் இடத்தில் யார்பிளேயிங் லெவனில் இடம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த நிலையில் நாளைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணியின் 3வது வரிசை வீரராக கில் களமிறங்குவார் எனவும் , இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் எனவும் கேப்டன் ரோகித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி, இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்