ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 5.6 ஆக பதிவு

ஒகினாவா மாகாணம் நஹாவில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-03 22:04 GMT

டோக்கியோ,

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தின் தலைநகர் நஹாவில் நேற்று மாலை 4 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 26.79 டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 126.41 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடையில் ஏற்பட்டதாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்,உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்