சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நிர்வாணமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் - அதிர்ச்சி சம்பவம்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நிர்வாணமாக வந்த நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-07-05 22:28 GMT

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் ஜுலிஸ்தன் இ ஹகர் என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள ஒரு தெருவின் சாலையில் நேற்று முன் தினம் இளைஞன் ஒருவர் பைக்கில் வந்தார். சாலையோரம் பைக்கை நிறுத்திய அந்த இளைஞன் தன் ஆடையை கலைந்து நிர்வாணமாகியுள்ளார்.

இதனிடையே, அந்த தெருவில் உள்ள ஒரு பெண் பர்தா அணிந்தவாறு நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த இளைஞன் நிர்வாணமாக அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளான். பின்னர் திடீரென அந்த பெண்ணிடம் இளைஞன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இளைஞனை தாக்கிய நிலையில் அந்த இளைஞன் தனது ஆடையை அணிந்துகொண்டு வேகமாக பைக்கில் புறப்பட்டு சென்றான். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் அந்த இளைஞன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த இளைஞனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  



Tags:    

மேலும் செய்திகள்