வீடு புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை - பயங்கர சம்பவம்

வீடு புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-28 10:07 GMT

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திட்டு தப்பிச்சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்