புரோட்டா மாஸ்டர் கொலையில் வாலிபர் கைது

குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-21 19:00 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புரோட்டா மாஸ்டர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 70). இவர் ஒட்டன்சத்திரத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி சுப்புலட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் ஆனந்த் (42).

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜன் குலசேகரன்பட்டினம் சவேரியார் கோவில் தெருவில் உள்ள தனது தங்கை ஆவுடையம்மாள் வீட்டிற்கு வந்தார்.

கழுத்தை இறுக்கி கொலை

கடந்த 19-ந் தேதி நடராஜன் குலசேகரன்பட்டினம் பெட்ரோல் பல்க் பகுதியில் இருந்த தனது மகன் ஆனந்ைத பார்க்க சென்றார். அப்போது, அங்கு பெரியப்பா உறவு முறையான முத்தையா மகன் சின்னத்துரை (23) என்பவர் வந்தார். அவர் திடீரென்று கீழே கிடந்த காங்கிரீட் கல்லால் நடராஜனை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சின்னத்துரையை வலைவீசி தேடிவந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான போலீசார் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் பதுங்கி இருந்த சின்னத்துரையை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது பெரியம்மா சுப்புலட்சுமியை சரியாக கவனிக்காததால் அவர் இறந்துவிட்டார். மேலும் நடராஜன் சொத்துக்களை விற்று அவரது மகன் ஆனந்திற்கு ஒன்றும் வைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தில் நடராஜனை கல்லால் அடித்து, கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் என்று கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சின்னத்துரையை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்