வாகனம் மோதி தொழிலாளி சாவு

நெல்லை அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-09-30 20:29 GMT

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பான்குளம் விலக்கு பகுதியில் நேற்று காலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிர் இழந்தவர் தென்கலம்புதூர் தெற்கு தெருவை சேர்ந்த ஜெய்லானி மகன் மரைக்காயர் (வயது 45) என்பதும், தொழிலாளியான இவர் தாழையூத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு பாப்பான்குளம் விலக்கு பகுதியில் உள்ள மசூதிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திரும்பி சென்ற போது வாகனம் மோதி உயிர் இழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்