சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்; அடுத்த மாதம் 10 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் எனத்தெரிகிறது.

Update: 2022-10-14 09:22 GMT

புதுடெல்லி,

நாட்டிலேயே அதிக வேகமாக  செல்லும் "வந்தே பாரத்" ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்கள்

புதுடெல்லி - வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர் - மும்பை மற்றும் அம்ப் அந்தாரா -புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த நிலையில், 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் எனத்தெரிகிறது. அடுத்த மாதம் 10 ஆம் தேதி இந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த வழித்தடத்தின் தொலைவு 483 கி.மீட்டர் ஆகும். 

Tags:    

மேலும் செய்திகள்