கபிஸ்தலம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

கபிஸ்தலம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

Update: 2023-03-12 19:31 GMT

கபிஸ்தலம் அருகே உள்ள அலவந்திபுரம் காவிரி ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அலவந்திபுரம் கிராம உதவியாளர் சுமதி உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சதீஷ் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிணவறையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறந்து கிடந்த முதியவர் அருகில் பூச்சி மருந்து பாட்டில் ஒன்று கிடந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்