அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

Update: 2023-01-18 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்