கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலையொட்டி கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-01-17 19:30 GMT

சேந்தமங்கலம்:-

காணும் பொங்கலையொட்டி கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.காணும் பொங்கலையொட்டி கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

காணும் பொங்கல்

காணும் பொங்கலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொல்லிமலைக்கு நாமக்கல்லை சுற்றி உள்ள பகுதிகள், திருச்சி, ஈரோடு, சேலம் போன்ற பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

அவர்கள் அங்குள்ள நம் அருவி, மாசிலா அருவி, எட்டு கை அம்மன், படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். அதேபோல அங்குள்ள சீக்குப்பாறை பட்டிக்கு சென்று அங்கிருந்து காட்சி முனையம் மூலமாக அடிவாரத்தில் உள்ள பகுதிகளை கண்டு ரசித்தனர்.

நீர்வீழ்ச்சியில் உற்சாகம்

தொடர்ந்து அரப்பளீஸ்வரர் கோவில் எதிரே வனப்பகுதியில் சுமார் 300 அடி உயரத்தில் வெள்ளியை உருக்கி விட்டது போல தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று அங்கு குளித்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்