ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் மறியல்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-20 18:54 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக நேற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் 80 பெண்கள் உள்பட 230 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் ராஜகோபால் மற்றும் முருகன் தலைமையில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 230 பேரும் சூலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்