8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-09 17:50 GMT

அரியலூர் மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் இளவரசி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரம் காலதாமதமின்றி வழங்க வேண்டும். சம்பளத்தை மாதந்தோறும் 5-ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்