மனைவியை தாக்கியவர் கைது

நெல்லை அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-10 20:15 GMT

நெல்லை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் பால்கனி (வயது 32). இவருடைய கணவர் சக்திவேல் முருகன் (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பால்கனியை, சக்திவேல் முருகன் அவதூறாக பேசி கம்பால் அடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் முருகனை நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்