விருதுநகர் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ

விருதுநகரில் எண்ணெய் ஆலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-05-21 19:10 GMT

விருதுநகர், 

விருதுநகரில் எண்ணெய் ஆலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

எண்ணெய் ஆலை

விருதுநகர் பாண்டியன் நகரில் அப்பண்ணசாமி என்பவருக்கு சொந்தமான வேப்ப எண்ணெய் மற்றும் முந்திரி எண்ணெய் ஆலை உள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இந்த ஆலையில் திடீரென தீப்பிடித்தது. 4 டேங்கரில் இருந்த வேப்ப எண்ணெய் மற்றும் முந்திரி எண்ணெய் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விபத்து நடந்த ஆலைக்கு விரைந்தனர். எண்ணெய் ஆலை என்பதால் தீ மளமளவென பரவ ஆரம்பித்தது.

இதையடுத்து விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களும், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்களும் ஆக மொத்தம் 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

பெரும் சேதம்

விருதுநகர் கோட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன், உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி மணிகண்டன், நிலைய தீயணைப்பு அதிகாரி கண்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் இந்த பணி நடந்தது.

தீவிபத்திற்கான காரணத்தை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை. இதுபற்றி விருதுநகர் பாண்டியன்நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீயணைப்பு படையினரின் தீவிர முயற்சியால் தீ அருகிலுள்ள இதர தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்