புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி

சோழம்பட்டில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.

Update: 2022-05-22 19:42 GMT

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே சோழம்பட்டில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினந்தோறும் மாலை நேரத்தில் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி பங்குதந்தை ஜேக்கப் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதையடுத்து இரவு 10 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் காவல் சம்மனசு, புனித அந்தோணியார், திருக்குடும்பம் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் விரியூர், பழையனூர், அருளம்பாடி, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, ஊர்காரியக்காரர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

சோழம்பட்டில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்