கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-05 18:35 GMT

பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதிகை நகரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்த அருணாசலம் (வயது 24) என்பதும், அவர் விற்பனை செய்ய கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1,400 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்