தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2024-06-28 00:51 GMT

கோப்புப்படம்

சென்னை,

தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம் - கொச்சுவேலி இடையே ஏற்கனவே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அந்த வாரந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), வரும் ஜூலை மாதம் 7, 14, 21 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), வரும் ஜூலை மாதம் 8, 15, 22 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06035), வரும் ஜூலை மாதம் 4, 6, 11, 13, 18, 20 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06036), வரும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்