விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-07-05 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டிகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 50). விவசாயி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கோவிந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கோவிந்தன் நேற்று அவருடைய விவசாய நிலத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்