பேன்சி ஸ்டோரில் திடீர் தீ

விருதுநகர் அருகே பேன்சி ஸ்டோரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2022-05-22 19:58 GMT

விருதுநகர்,

விருதுநகர் அருகே பட்டம்புதூர் விலக்கில் சூலக்கரையை சேர்ந்த கவிதா என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோர் உள்ளது. இக்கடையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயணைப்புத்துறையினரின் நடவடிக்கையால் இக்கடையை அடுத்துள்ள 5 கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது பற்றி சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்