வாஷிங்மெஷின் திடீரென எரிந்ததால் பரபரப்பு

அருப்புக்கோட்டையில் வாஷிங்மெஷின் திடீரென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-27 19:09 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியில் ராஜேஷ் என்பவர் வீட்டில் கரும்புகை வருவதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது வாஷிங் மெஷின் முழுவதும் எரிந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. வாஷிங்மெஷினில் துணியை போட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வாஷிங்மெஷினை நிறுத்தாமல் சென்றுள்ளனர். மீண்டும் மின்சாரம் வந்த போது வாஷிங் மெஷின் தானாக இயங்கியுள்ளது. நீண்ட நேரம் வாஷிங்மெஷின் தொடர்ந்து இயங்கியதால் வாஷிங் மெஷின் முழுவதும் எாிந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்