கம்போடியாவில் திருவள்ளுவருக்கு சிலை - மக்கள் நீதி மய்யம் பாராட்டு

கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

Update: 2022-09-30 09:26 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கம்போடியா நாட்டில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டை முன்னிட்டு, ஷியாம் ரீப் நகரில் உள்ள தலைமைச்செயலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக பொதுமறையை எழுதிய வள்ளுவரின் புகழ் பாரெங்கும் பட்டொளி வீசிப் பறப்பது தமிழ் இனத்துக்கு பெருமிதம்.

வான்புகழ் கொண்ட வள்ளுவருக்குப் பெருமை சேர்த்த அங்கோர் தமிழ்ச்சங்கம், சிலை வழங்கிய வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தலைவர் வி.ஜி.சந்தோசம், துணை நின்ற கம்போடியா அரசின் கலை, பண்பாட்டுத் துறையினருக்கு மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்