பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-09-10 17:59 GMT

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியகளால், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசி மற்றும் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்