ஸ்கேட்டிங் போட்டி:செட்டிநாடு பப்ளிக் பள்ளி முதலிடம்

ஸ்கேட்டிங் போட்டி:செட்டிநாடு பப்ளிக் பள்ளி முதலிடம்

Update: 2023-08-16 18:45 GMT

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப்புகளுக்கு இடையிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள சுமார் 15 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இப்போட்டிகளை சிவகங்கை ரோலர் ஸ்கேட்டிங் கிளப் மற்றும் செட்டிநாடு பப்ளிக் பள்ளி இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. போட்டிகளை செட்டிநாடு பள்ளியின் முதல்வர் உஷா குமாரி தொடங்கி வைத்தார். மொத்த புள்ளிகளின் அடிப்படையில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 2-வது இடத்தையும், சிவகங்கை ஆக்ஸ்போர்ட் பள்ளி மாணவர்கள் 3-வது இடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செட்டிநாடுபப்ளிக் பள்ளியின் சேர்மன் எஸ்.பி குமரேசன் மற்றும் தாளாளர் அருண் குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்