கரூர்-வீரராக்கியம் வரை 4 வழி சாலை அமைக்கும் பணிக்கான இடங்கள் தேர்வு

கரூர்-வீரராக்கியம் வரை 4 வழி சாலை அமைக்கும் பணிக்கான இடங்கள் தேர்வு நடந்தது.

Update: 2023-01-27 18:54 GMT

கரூர்-திருச்சி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் கரூர் முதல் வீரராக்கியம் வரை 4 வழி சாலை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து கைகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கரூர் அருகில் நகரும் நடை பாதை விரைவில் தொடங்கும் வகையில் சாலைகள் 60 அடி அகலம் போடப்படுகிறது.

இந்த சாலை பணிகள் நிறைவு பெற்றதும், கரூர்-திருச்சி வரை ஒன்றரை மணி நேரத்தில் சென்று வர வசதியாக இருக்கும். அதன்படி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி, கோட்ட பொறியாளர் ரவிக்குமார், கரூர் நெடுஞ்சாலைத்துறை துணை பொறியாளர் கர்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்