புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-23 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் உள்ள ஜெயபால் (வயது 47) என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயபாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்