பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

Update: 2023-04-07 18:45 GMT

கோவை

கோவையை அடுத்த பட்டணம் நடுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகன் பாலாஜி (வயது 23). இவரும், பட்டணம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரி (22) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு யோகேஸ்வரி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாலாஜி, யோகேஸ்வரி இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

யோகேஸ்வரி அளித்த மனுவில், நாங்கள் இருவரும் காதலித்து திருப்பூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் செய்துள்ளதால் எங்களை பெற்றோர் மிரட்டுகிறார்கள். எனவே எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்