பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்

Update: 2022-09-28 18:45 GMT

வேதாரண்யம் அருகே மணக்காடு பிடாரி கட்டளை தெருவை சேர்ந்தவர் சுமித்ரா(வயது22). இவர் தனது காதல் கணவர் பரமேஸ்வரன் மற்றும் உறவினர்களுடன் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தார். இந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நான்(சுமித்ரா) வேதாரண்யம் பகுதியில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் எம்.காம் படித்துள்ளேன். இந்நிலையில் எங்கள் ஊரைச் சேர்ந்த பரமேஸ்வரனை காதலித்து எனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த 22-ந் தேதி முத்துப்பேட்ைடயில் திருமணம் செய்து கொண்டேன்.

நாங்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்த எனது பெற்றோர், உறவினர்கள் எங்களை கவுரவ கொலை செய்ய போவதாக கூறி தேடி வருகின்றனர். எனவே எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் காதல் ேஜாடிக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்