மரக்கன்று நடும் விழா

சுரண்டை அரசு கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

Update: 2023-08-10 19:00 GMT

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் சார்பில் புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் செல்வகணபதி, வீரபத்திரன், மோகன கண்ணன், ஸ்டீபன் டேவிஸ், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 201 திட்ட இயக்குனர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளி முருகன், சுரண்டை பசுமை இயக்க தலைவர் டி.கே.எம். ஆறுமுகசாமி கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பெர்க்மான்ஸ், பிரான்சிஸ் ஆபிரகாம் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்