தரமில்லாத குடிநீர் விற்பனையா?

ஸ்ரீவில்லிபுத்தூரில் தரமில்லாத குடிநீர் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-05-21 19:58 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளில் தினமும் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேயனாற்று படுகை என அழைக்கப்படும் செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. இதுபோக மக்கள் விலைக்கு குடிநீர் வாங்கி குடித்து வருகின்றனர். இந்தநிலையில் கேன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்