ரூ.38 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை

சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.38 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனையானது.

Update: 2023-03-14 18:28 GMT

கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான விற்பனை நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஆகிய ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் விற்பனையில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த விற்பனையில் 23.73 குவிண்டால் எடை கொண்ட 8,012 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.15-க்கும், சராசரி விலையாக ரூ.25.15-க்கும் என மொத்தம் ரூ.58 ஆயிரத்து 121-க்கு விற்பனையானது.

அதேபோல் 228.02 குவிண்டால் எடை கொண்ட 467 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.76-க்கும், சராசரி விலையாக ரூ.83.19-க்கும் விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.76.91-க்கும் என மொத்தம் ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. 36.35 குவிண்டால் எடை கொண்ட 50 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.165.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.144.10-க்கும், சராசரி விலையாக ரூ.158.10-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 218-க்கு விற்பனையானது.

194.25 குவிண்டால் எடை கொண்ட 592 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 6 ஆயிரத்து 875-க்கு விற்பனையானது. அதன்படி சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.38 லட்சத்து 3 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்