ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கருப்பு பட்டையுடன் பணியாற்றினர்

விருதுநகரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கருப்பு பட்டையுடன் பணியாற்றினர்.

Update: 2022-11-09 18:51 GMT

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் பணி சுமை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 ஊராட்சி செயலர்கள் இறந்துள்ள நிலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட கிளையினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்கள் முன்பு இரங்கல் கூட்டம் நடத்தினர். மேலும் அனைத்து அலுவலர்களும் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்