விவசாயி வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளை போனது.

Update: 2022-12-25 20:13 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தட்டான் குளத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 75). விவசாயி. இவர் பீரோவில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம், 5 பவுன் நகை ஆகியவற்றை வைத்துவிட்டு பீரோ சாவியை மெத்தை அடியில் வைத்துள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்தபோது பணம் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்