அறந்தாங்கி கூத்தாடிவயல் சாலையை சீரமைக்க கோரிக்கை

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அறந்தாங்கி கூத்தாடிவயல் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-22 19:11 GMT

குண்டும், குழியுமான சாலை

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கூத்தாடிவயல் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை வழியாக மூக்குடி, நரிக்குறவர் காலனி, உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அறந்தாங்கியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று படித்து வருகின்றனர்.இந்த சாலை வழியாகத்தான் மாணவ- மாணவிகள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

சீரமைக்க கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- கூத்தாடிவயல் சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. ஆனால் இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது குண்டும்- குழியுமாக மாறிவிட்டது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இந்த சாலையை சீரமைக்கக்கோரி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்