தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
தெருவிளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணையில் இருந்து கோவில்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. ஏழாயிரம் பண்ணை பஸ் நிலையத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ½ கிலோ மீட்டர் தூரமாகும். இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் தேவையான இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.