கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் மறியல்

கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-31 20:14 GMT

மங்களமேடு:

மறியல்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேட்டை அடுத்த சு.ஆடுதுறையில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான பெரியாண்டவர் கோவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 1.30 மணியளவில் வருவாய்த்துறையினர் அந்த நிலத்தை அளவீடு செய்தபோது, அதே ஊரை சேர்ந்த ஒருவர் 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த சமுதாய மக்கள், நிலத்தை சரியாக அளந்து கல்நடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, நிலத்தில் பயிரிட்டுள்ளதாக கூறப்படும் நபர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கக்கோரி, அந்த சமுதாய மக்கள் திருமாந்துறையில் இருந்து அகரம்சீகூர் செல்லும் சாலையில் குருசாமி என்பவர் தலைமையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அறுவடை செய்த பின்...

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி மற்றும் சு.ஆடுதுறை ஊராட்சி மன்ற தலைவர் கீதா ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் பயிர் அறுவடை செய்த பின், ஒரு மாத கால அவகாசத்தில் நில அளவை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்