மழை வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடியில் மழை வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.

Update: 2023-06-18 18:45 GMT

தூத்துக்குடி திரு.வி.க நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 83-வது அவதார விழா நடந்தது. இதனை முன்னிட்டு உலக சமாதானம் வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தாமிரபரணியில் நீராதாரம் பெருகவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில் வளம் வேண்டியும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.

வேள்வி பூஜையில் செவ்வாடை அணிந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 1008, 108 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு சக்திபீடத்தின் சார்பில் தையல் எந்திரம், இலவச சேலை, கல்வி உதவித்தொகை, கண் பார்வை இழந்த இளைஞருக்கு தொழில் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க பொருளாளர் கண்ணன், வேள்விக்குழு கிருஷ்ணநீலா, பிரசாரம் முத்தையா, இளைஞர் அணி செல்லத்துரை, சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, வேள்விக்குழு பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்