சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-07-30 20:14 GMT

ஆலங்குளம், 

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மாயூரநாதர் சுவாமி கோவில், கருப்பஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

சேத்தூர்

அதேபோல சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் கோவில், சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லம் கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

இளந்திரை கொண்டான் காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆலங்குளம்

ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி சங்கரலிங்கசாமி, எதிர்கோட்டை துணைகண்ட லிங்கேஸ்வரர், சிமெண்டு ஆலை காலனியில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர், கண்மாய்பட்டி குபேர லிங்கேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக நந்திக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

தாயில்பட்டி

வெம்பக்கோட்டையை அடுத்த சத்திரம் கிராமத்தில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

எட்டக்காபட்டி அருகே உள்ள செல்லியாரம்மன் கோவில், பழைய ஏழாயிரம் பண்ணை ஈஸ்வரன் கோவில், வெம்பக்கோட்டையில் சொக்கலிங்க சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்