சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-13 18:51 GMT

வத்திராயிருப்பு, 

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

பின்னர் வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேறி சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

பக்தர்கள் தரிசனம்

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். போலீசார், தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், மருத்துவக்குழுவினர், வருவாய் துறையினர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்களில் வந்த பக்தர்கள் 6 கி.மீ. தூரம் தாணிப்பாறைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

எனவே பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்