நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-02 18:34 GMT

நொய்யல் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு, வலையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்