போலீஸ் என கூறி ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது

பூந்தமல்லியில் போலீஸ் என கூறி ஏமாற்றி திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-07 21:45 GMT


வேலூரை சேர்ந்தவர் தினகர் (வயது 32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் தற்போது பூந்தமல்லியில் வசித்து வருகின்றனர்.தனது கணவர் போலீஸ் என கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிவேதா பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தார்.

போலீசார் விசாரணை

இந்நிலையில் தினகைர பிடித்து விசாரித்தபோது, அவர் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் போன்று போலியாக அடையாள அட்டையை வைத்து கொண்டு ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீஸ் வேலை வாங்கி தருவதாக தினகர் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்