பா.ம.க. கொடியேற்று விழா

வடகால் கிராமத்தில் பா.ம.க. கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2022-12-07 17:56 GMT

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், வாலாஜா மத்திய ஒன்றிய பா.ம.க. சார்பில், வடகால் கிராமத்தில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் வி.எல்.எஸ்.சபரிகிரிசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ரெயில்வே இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு, கட்சி கொடியேற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட தலைவர் ஆறுமுகம், ஏ.வி.எம்.என்.துரைராஜ், எஸ்.எல்.எஸ்.மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்