மக்கள் நீதிமன்றம்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

Update: 2022-11-13 18:45 GMT

தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கர் தலைமையில் தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 45 சிவில் வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்தது. இவற்றுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு மேலாக முடிவெடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு வக்கீல் முருகன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்