லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

தேவகோட்டை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-20 18:45 GMT

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் ேதவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் பூசலாகுடி ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் மணிமுத்து. அதே ஊராட்சி இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கராஜ் புதிய வீடு கட்டுவதற்காக பிளான் அப்ரூவல் கோரி ஊராட்சி செயலாளர் மணிமுத்துவிடம் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக மணிமுத்து ரூ.1500 லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி தங்கராஜ் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்பேரில் ரசாயன பவுடர் தடவிய பணத்தை தங்கராஜ், மணிமுத்துவிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீசார் மணிமுத்துவை கையும், களவுமாய் பிடித்து கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்