நெல் கொள்முதல் பணிகள் பாதிப்பு

நெல் கொள்முதல் பணிகள் பாதிப்பு

Update: 2023-06-21 20:02 GMT

அம்மாப்பேட்டை பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அறுவடை பணி

அம்மாப்பேட்டை வட்டத்தில் தற்போது கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தங்கு தடையின்றி கொள்முதல் செய்வதற்காக இரும்புதலை, ரெங்கநாதபுரம், பொன்மான்மேய்ந்தநல்லூர், சாலியமங்களம், கோவத்தகுடி, கொத்தங்குடி, நிம்மேலி, காந்தாவனம், ராராமுத்திரகோட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வந்தன.

கொள்முதல் நிலை பணிகள் பாதிப்பு

இந்தநிலையில் அம்மாப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல்செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கொள்முதல் செய்வதற்காக கொண்டு வந்த நெல்மணிகளை கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து காத்திருக்கின்றனர். இந்த மழையால் நெல்மணிகள் நனைந்து சேதமாகும் நிலை உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்