தேசிய இறகு பந்து போட்டி- மதுரை மாணவி தங்கம் வென்றார்

தேசிய இறகு பந்து போட்டியில் மதுரை மாணவி தங்கம் வென்றார்

Update: 2023-10-07 21:08 GMT


பெங்களூருவில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகள் நடந்தது.இதில் இந்தியாவில் இருந்து பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் 14-வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இறகு பந்து போட்டியில் மதுரையை சேர்ந்த ஜீவனா பள்ளி மாணவி ஹன்சிகா தங்கம் வென்றார். மேலும் அவருக்கு கோப்பையும் வழங்கப்பட்டது. தேசிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்