நாமக்கல்லில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு லாரி டிரைவருக்கு வலைவீச்சு; தாயார் சிக்கினார்

நாமக்கல்லில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு லாரி டிரைவருக்கு வலைவீச்சு; தாயார் சிக்கினார்

Update: 2022-08-17 16:15 GMT

நாமக்கல் முதலைப்பட்டியை சேர்ந்தவர் ராணி (வயது 45). இவருடைய மகன் மணிகண்டன் (25). லாரி டிரைவர். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தில் மணிகண்டனின் தாயார் ராணி உடந்தையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராணியை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்